search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ருட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்"

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த வாத்திப்பாளையம் ஊமை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்தியா. இவர்களுக்கு 11 வயதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகள் உள்ளார்.

    சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் படித்து வந்த அந்த சிறுமி விடுமுறைக்காக வாத்திப்பாளையத்துக்கு வந்திருந்தார். காலையில் சத்தியாவும், சரவணனும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர்.

    வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது எழுமேடு அகரம், திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (58) என்பவர் சிறுமியை கத்திரிக்காய் தோட்டத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதை அறிந்த சிறுமியின் தாயார் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து மாரிமுத்து வை கைது செய்தனர்.
    ×